கணவருடன் தொலைபேசியில் லீலை!! பிரான்சிலிருந்து வந்து யாழ் பல்கலைக்கழக மாணவி மீது குடும்பப் பெண் தாக்குதல்!!

 

பிரான்சிலிருந்து வந்த குடும்பப் பெண் ஒருவர் திருநெல்வேலிப் பகுதியில் தாயுடன் வசித்து வந்த திருகோணமலையைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவி மீது தா்ககுதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பப் பெண் பொலிசாருடன் வந்தே பொலிசாருக்கு முன் மாணவியின் தலைமுடியைப் பிடித்து தாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த செவ்வாய்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது


யாழ் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வீடு ஒன்றில் வீட்டின் ஒரு பகுதியில் திருகோணமலையைச் சொந்த இடமாகக் கொ்ணட தாயும் மகளுமாக அனெக்ஸ்சாக குடியிருந்துள்ளார்கள். பல்கலைக்கழகத்திற் கற்கும் தனது மகளுக்காக தாயும் மகளுடன் வந்து தங்கியருந்துள்ளார். மகளுக்கு பேஸ்புக் மூலம் பிரான்சில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அது பின்னர் அந்தரங்க வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நீடித்துள்ளதுடன் பல்கலைக்கழக மாணவிக்கு பெருமளவு பணமும் பிரான்ஸ் குடும்பஸ்தரால் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மாணவியை பிரான்சுக்கு எடுப்பதற்கும் குடும்பஸ்தர் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதற்காக பிரான்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவியை கற்க வைப்பதற்காக அங்குள்ள சட்டத்தரணி ஒருவருடனும் தொடர்பு கொண்டு அதற்காக செலவுகளையும் செய்து வந்துள்ளார்.



கணவனின் நடவடிக்கைகளை மோப்பம் பிடித்து அறிந்த மனைவி இது தொடர்பாக கேட்ட போது , தனது நண்பன் ஒருவனின் காதலியை பிரான்ஸ் அழைத்து வருவதற்கு தான் உதவி செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அதனை நம்புவது போல் மனைவி காட்டிக் கொண்டு கணவன் மது போதையில் வீட்டில் இருந்த நேரத்தில் கணவனின் தொலைபேசியை எடுத்து பல தடவைகள் ஆராய்ந்து பார்த்த போது யாழ் பல்கலைக்கழ மாணவிக்கும் தனது கணவருக்குமான தொடர்பு பிடிபட்டுள்ளது. அத்துடன் கணவனின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்ட்ட ஆவணங்கள் மற்றும் கணவனால் அனுப்பப்பட்ட பணக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாகவும் மனைவி கண்டு பிடித்துள்ளார். அத்துடன் வட்சப் மூலம் கணவன் நித்திரையாகியபின் அந்த தொலைபேசியிலிருந்து குறித்த மாணவிக்கு தொடர்பு எடுத்த போது மாணவி தனது உடலைக் காட்டியபடி கதைக்க முற்பட்டதையும் கணவன் என நினைத்து காதல் வார்த்தைகள் பொழிந்ததையும் மனைவி அப்படியே ஆதாரங்களாக எடுத்து வைத்திருந்துள்ளார். கணவரால் மாணவிக்கு கிட்டத்தட்ட 8500 யூரோ பணம் அனுப்பிய ஆதாரங்களையும் மனைவி எடுத்துள்ளார்,

அதன் பின்னரே கணவருடன் சண்டை பிடித்த பின் யாழ்ப்பாணத்திற்கு தனித்து வந்து பொலிசாரிடம் முறையிட்டதுடன் குறித்த மாணவியைப் பொலிசார் தொலைபேசியில் பல தடவைகள் அழைத்த போதும் மாணவி பொலிஸ் நிலையம் செல்லவில்லை என தெரியவருகின்றது. அதன் பின்னர் பொலிசார் மாணவியின் வீட்டுக்கு முறைப்பாடு கொடுக்க சென்ன போது பொலிசாருடன் சேர்ந்து அவர்களுக்கு பின்னால் பிரான்சிலிருந்து வந்த குடும்பப் பெண்ணும் குறித்த மாணவியின் வீட்டுக்கு சென்று மாணவி மீது தாக்கியதாகவும் அதே நேரம் மாணவியின் தாயார் என நினைத்து வீட்டு உரிமையாளரின் மனைவி மீதும் பொலிசார் தடுக்கத் தடுக்க பிரான்ஸ் குடும்பப் பெண் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பானதாகத் தெரியவருகின்றது. வீட்டு உரிமையாளரின் மனைவி பொலிஸ் நிலையம் செய்ய முற்பட்ட வேளை அங்கு நின்ற பொலிசாரால் தவறுதலாக நடந்தது என கூறி சமாதானம் செய்யப்பட்டு பிரான்ஸ் குடும்பப் பெண் கடுமையாக பொலிசாரல் எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் மாணவியை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு பொலிசார் சென்றதாகத் தெரியவருகின்றது.