தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படுமா..! கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

 


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் மதுர செனவிரத்ன (Madura Seneviratne) தெரிவித்தார்.


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் எதிர்காலத்தை மதிப்பிடுவதற்கும் அது 2029 க்குப் பிறகும் தொடர வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்கும் 2028 ஆம் ஆண்டில் ஒரு குழு நியமிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


திட்டத்தை தயாரிக்கும் பரீட்சைகள் திணைக்களம்

பரீட்சையுடன் தொடர்புடைய தேவையற்ற அழுத்தத்தைக் குறைக்க பரீட்சை திணைக்களம் ஒரு திட்டத்தைத் தயாரித்து வருவதாகவும் துணை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பாடசாலைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை முறையாகக் குறைப்பதற்கும், புலமைப்பரிசில் பரீட்சை போட்டித் தன்மை காரணமாக மாணவர்கள் மீதான சுமையைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.